தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், அரியலூர், பெரம்பலூர், கருர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் 6 மற்றும் 7ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.