தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.