தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்ற வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் தயாராக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் படி பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்தள்ள பேரிடர் மேலாண்மை துறை எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றால் உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளது.