தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்வு என்ற செய்தி வதந்தி என்றும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியதால், கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.