100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 2 ஆயிரத்து 999 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய 4 ஆயிரத்து 34 கோடி நிதியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்து இருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2 ஆயிரத்து 999 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில், பாக்கி நிதியையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.