முழுமையான விசாரணைக்கு பிறகே சாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பட்டியலின, பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் வழங்க விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.