பஹல்காம் தாக்குதலை காரணம் காட்டி, பாஜகவினர் நாட்டில் ஒரு பதற்றத்தை உருவாக்கி வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார். கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்ற திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை யாராலும் நியாயப்படுத்த முடியாது என்றும், தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆனால், அதற்காக ஒரு போர் தேவையா என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.