கோடை வெயில் காரணமாக முட்டை உற்பத்தி குறைந்து வரும் நிலையில், நாளுக்குநாள் விலை அதிகரித்து வருவதால் முட்டை பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மீன்பிடித் தடைக்காலம் உள்ளதால் தற்போது முட்டை நுகர்வு அதிகரித்துக் காணப்படும் நிலையில், முட்டை உற்பத்தியோ 20 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு, கோடை காலத்தில் கோழிகள் தீவனம் எடுத்துக் கொள்வது குறைந்தது தான் காரணம் என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.