தமிழகத்தில் உள்ள 69 சதவீத Cஆபத்து வந்துவிட்டதாகவும், இதனால் கலவரம் வரும், திமுக ஆட்சி கலையும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் சிவதாபுரம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன பயம்? என்றும் கேள்வி எழுப்பினார்.