2 முறை EMI பிடித்தம் : தமிழ்நாடு முழுவதும் சுமார் 1200 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடம் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் பிப்ரவரி மாதத்திற்கான EMI தொகையை இரண்டு முறை பிடித்தது தொடர்பாக இன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த நிலையில், பணம் பிடித்த வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் குறுஞ்செய்தி அனுப்பி விளக்கம் அளித்துள்ளது.தொழில் நுட்ப கோளாறு காரணமாக இத்தகைய தவறு நடந்து விட்டதாகவும், அதனால் பிப்ரவரி மாதத்தில் இரண்டு முறை EMI பிடித்தம் செய்து விட்டதாகவும்.இன்னும் ஒரு நாளில் பிடித்தம் செய்த அதே வங்கிக் கணக்கில் மீண்டும் பணம் செலுத்தப்படும் எனவும் பைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விளக்கம். Related Link இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட எம்.பி. பப்பு யாதவ்