இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டி, மும்பை-டெல்லி அணிக்களுக்கு வாழ்வா சாவா போட்டியாக அமையவுள்ளது. 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்ற நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்கு டெல்லி- மும்பை அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி பிளே ஆஃப்-க்கு தகுதிபெறும்.