ராஜஸ்தானில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகள் கடந்த 8-ந் தேதி தரம்சாலாவில் விளையாடியபோது, இந்தியா -பாகிஸ்தான் சண்டை காரணமாக எல்லையில் தாக்குதல் தீவிரமானதால் ஸ்டேடியத்தில் மின்கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. அந்த ஆட்டம்தான் தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது. தற்போது புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள பஞ்சாப், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறும்.