இளம் வயதிலேயே மிகப்பெரிய சாதனை படைத்துள்ள வைபவ் சூர்யவன்ஷியின் வெற்றிக்குப் பின்னால் கடினமான உழைப்பு உள்ளதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். மேலும், இதன்மூலம் ஒருவர் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் மலர்வார் என தெரிவதாக கூறினார். இளையோருக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை காணொலி வாயிலாக துவங்கி வைத்த போது இதனைத் தெரிவித்தார்.