ஓய்வு குறித்து இப்போதைக்கு தாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சி.எஸ்.கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்தார். எல்லா இடங்களிலும் கிடைக்கும் ரசிகர்களின் அன்பு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர், ஐபிஎல் தொடரில் தனது கடைசி ஆண்டு குறித்து யாருக்கும் தெரியாது என்று கூறினார்.