சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் பிவி சிந்து, சக நாட்டு வீராங்கனையான அன்மோல் கார்பை 21-17, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.