சுதர்மன் கோப்பை பாட்மின்டன் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி விலகியுள்ளது. சீனாவில் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்க உள்ளது. இதில் இந்திய அணி 'டி' பிரிவில் டென்மார்க், இங்கிலாந்து, இந்தோனேஷியா ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் பர்மிங்காமில் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் 2-வது சுற்றில் சிராக் ஷெட்டியின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தினால், சுதிர்மன் கோப்பையில் இருந்து சாத்விக், சிராக் ஜோடி விலகியது. இதனையடுத்து ஆண்கள் இரட்டையரில், போதிய அனுபவம் இல்லாத ஹரிகரன், ரூபன் குமார் ஜோடி களமிறங்க உள்ளது.