இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயரை சேர்த்திருக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒரு வருடமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், டெஸ்ட் கிரிக்கெட் மாறுபட்டவை என்றாலும், அவரால் என்ன செய்ய முடிகிறது என்பதை பார்க்க இந்த தொடரில் சேர்த்திருக்கலாம் என கூறியுள்ளார்.