வைபவ் சூர்யவன்ஷியின் சதத்தை கொண்டாட சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து கைத்தட்டிய உற்சாகப்படுத்திய ராகுல் டிராவிட்டின் செயலை கண்டு ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போயினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்க முடியாத சூழ்நிலையில், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே அணியுடன் பயணம் செய்து அவர்களை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில் அந்த அணியின் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, 35 பந்துகளில் சதம் அடித்து, டிராவிட் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையிலும், இந்திய கிரிக்கெட்டை புரட்டிப் போடும் வகையிலும் அதிரடி ஆட்டத்தை ஆடினார். டி20 வரலாற்றின் இரண்டாவது அதிவேக சதத்தை அடித்து இளம் கிரிக்கெட் வீரர் என்ற இடம் பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி...