மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கோலாலம்பூரில் நடந்து வரும் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரான்ஸின் டோமா ஜுனியர் பாபோவ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய கிடாம்பி, 24-க்கு 22, 17-க்கு 21, 22-க்கு 20 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் யுஷி தனகாவுடன் மோதுகிறார்.