காயம் காரணமாக பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் விளையாட மாட்டார் என கூறப்படும் நிலையில், அடுத்த போட்டியிலிருந்து ஜிதேஷ் சர்மா அந்த அணியை வழி நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ரஜத் படிதார் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது அவரது விரலில் காயம் ஏற்பட்டது. இதனால், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஜத் படிதார் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ப்ளே ஆஃப்-ஐ கருத்தில் கொண்டு ரஜத் படிதார் எஞ்சிய போட்டிகளில் ஆட மாட்டார் என்றே கூறப்படுகிறது.