கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கனமழை பெய்து வரும் நிலையில், சின்னசாமி மைதானத்தில் தேங்கிய மழை நீரில் ஆர்சிபி வீரர் டிம் டேவிட் சறுக்கி விளையாடும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆபரேஷன் சிந்தூரால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. பெங்களூருவில் நடைபெறும் முதல் போட்டியில் ஆர்.சி.பி அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.