‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ஆஸ்திரேலியாவின் தெமுர் குபோகரோவை எதிர்கொண்டார். இதில் முதல் இரு ஆட்டங்கள் சமன் ஆன நிலையில் டைபிரேக்கரில் அதிவேகமாக காய்களை நகர்த்தும் முறை கடைபிடிக்கப்பட்டது. இதிலும் முதல் 4 ஆட்டங்களில் சமநிலை நீடித்தது. இதையடுத்து ஒதுக்கப்பட்ட மேலும் இரு ஆட்டங்களில் பிரக்ஞானந்தா 5க்கு 3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.