தோனி பாணியில் ஓய்வு பெற ரோகித் சர்மா திட்டமிட்டிருந்த நிலையில், அதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது தோனி பாதியிலேயே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதே போல் ரோகித் சர்மாவும் இங்கிலாந்து பயணத்தின் போது ஓய்வு பெற திட்டமிட்டதாக கூறப்படுகிறது.