'கோபா டெல் ரே' கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பார்சிலோனா அணி, 32-வது முறையாக சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. ஸ்பெயினில் நடைபெற்ற இறுதி போட்டியில் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சிறப்பாக விளையாடிய பார்சிலோனா அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.