ஜெர்மனியில் நடைபெறும் 3-ஆவது உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர்சிங் தங்கப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அவர் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து 3-வது முறையாக உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் சுருச்சி இந்தர்சிங் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.