ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் களமிறங்கிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ், 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அசத்தினார். போட்டி முடிந்த பிறகு அவரை, லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டி கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ பதிவிட்டுள்ளார், "ஐபிஎல் தொடரில் 8 ஆம் வகுப்பு மாணவனின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக கண் விழித்ததாகவும், அறிமுக போட்டியில் என்ன ஒரு ஆட்டம்!" என்றும் பதிவிட்டுள்ளார்.