கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வைகுண்ட வளாகம் முழுவதும் நிரம்பி, அவுட்டர் ரிங் ரோட்டில் உள்ள சிலா தோரணம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அன்னபிரசாதம் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. சனிக்கிழமை ஒரே நாளில் 90 ஆயிரத்து 211 பக்தர்கள் தரிசனம் செய்து, 3 கோடியே 11 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.