வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. எனவே, அடுத்த 5 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இடவம் எனப்படும் வைகாசி மாதத்துக்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட்டது. இதையடுத்து, தொடர்ந்து 5 நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்பதால், வரும் 19-ஆம் தேதி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.