மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ருத்ர பசுபதீஸ்வரர் கோயிலில் அமுது படையல் விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக குளத்தில் இருந்து சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்த வந்த பெண்களுக்கு அமுது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.