தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு விமான கலசங்களுக்கு தங்க தகடு பூசும் பணி தொடங்கியது. ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், கோயிலில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.