பொள்ளாச்சி வழக்கில் திமுக அரசுக்கோ, முதலமைச்சர் ஸ்டாலினுக்கோ என்ன பங்கு உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பொள்ளாச்சி வழக்கில் கைது செய்ததும் விசாரணையை சிபிஐக்கு மாற்றியதும் அதிமுக அரசு என்றும், ஆனால் முதலமைச்சர் கூச்சமே இல்லாமல் மார் தட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?" என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன் என வினவியுள்ள இபிஎஸ், 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சலில் முதலமைச்சர் இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும் 4 ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug என சாடியுள்ளார்.