வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு அரசு தனியாக வழக்கு தொடராதது ஏன்? என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். இஸ்லாமியர்களின் உரிமைகள் பறிபோவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என தொடர்ந்து பேசி வரும் திமுக அரசு, செயல் அளவில் அதற்கான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும்? எனவும் விஜய் வினவியுள்ளார். வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசின் தார்மீக கடமை என்றவர், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்திற்கு கடந்து போவதாக இல்லாமல், அரசியலமைப்பு ஜனநாயகத்தை காக்க வேண்டிய காலத்திற்கான அறைகூவலாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.