தமிழகத்துக்கான வந்தேபாரத் ரெயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பதாகவும், அவைகளை மீட்டு, தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் இயக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் இயக்குவதற்காக தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 வந்தே பாரத் ரயிலுக்கான பெட்டிகளில், 9 ரயிலுக்கான பெட்டிகள் ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பது அநீதியானது என அவர் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வேயின் அலட்சியம்தான் இதற்கு காரணம் எனவும் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.