தேமுதிகவுடன் சுமுகமான உறவு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேமுதிக குறித்து ஏதாவது பேசி கூட்டணியை உடைக்க முயற்சிக்க வேண்டாம் எனவும், அது ஒருபோதும் நடக்காது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.