மஞ்சப்பை மீண்டும் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.