கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், விலையில்லா பாட நூல்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பதாக அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்தார். தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அரசு பள்ளியில் மாணவர்கள் எவ்வளவு பேர் சேர்ந்துள்ளனர் என்பது குறித்து ஆகஸ்ட் மாதத்தில் தெரிய வரும் என்றார்.