பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரனை காப்பாற்ற திமுக முயற்சி செய்தது என நிரூபித்தால் அதனை எதிர்கொள்ள தயார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யார் அந்த சார்? என்பதை வெளியில் சொல்ல பயமாக இருந்தால், சட்டமன்றத்தில் இபிஎஸ் சொல்லி இருக்க வேண்டும் என்றார். யார் அந்த சார்? என்று கேட்டால் முதல் சார் எடப்பாடி பழனிசாமிதான் என்றார்.