சிங்கப்பூர் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.புருனே பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றார். அங்கு பிரதமர் மோடியை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். மேலும் அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.