அதிமுக, பாஜகவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தங்களை தவிர்க்க முடியாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து வியாழக்கிழமையன்று ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார் என தெரிவித்தார்.