சந்தர்ப்பவாத கூட்டணியான அதிமுக - பாஜக கூட்டணியால் தமிழ்நாட்டில் எதுவும் நிகழப்போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கடுமையாக சாடினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்றும், பாஜக - அதிமுக கூட்டணியால் அதை உடைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.