நீட் என்பது தேர்வு கிடையாது அது ஒரு சூழ்ச்சி என துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் மாநில மருத்துவ அணி சார்பில் நடைபெற்ற பகுத்தறிவு, சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சிக்கான பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த தேர்தலில் அதிமுகவுக்கு வாய்ப்பளித்தால் தமிழ்நாட்டை பாஜகவிற்கு அடகு வைத்து விடுவார்கள் என்றும் பாஜகவின் IT, ED தங்கள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டதாக விமர்சித்தார்.