நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த மத்திய அரசு மீது, பாமக தலைவர் அன்புமணி வருத்தம்.உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தல்.பா.ம.க. தலைவர் அன்புமணி கூறி இருப்பதாவது:காவிரி பாசன மாவட்டங்களில், குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்ததால், அவற்றை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல், வருத்தமளிக்கிறது.நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அரும்பாடு பட்டு சாகுபடி செய்த நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டி வரும். எனவே, உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.