பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு கிடைத்ததற்கு தாம்தான் காரணம் என, எடப்பாடி பழனிசாமி வெட்கமே இல்லாமல் பெருமை பேசுவதாக, அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுகவினருக்கு தொடர்பு இருப்பதை அறிந்து அவர்களை காப்பாற்ற இபிஎஸ் முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கில் நடந்த பித்தாலாட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசியதும் எடப்பாடி பழனிசாமி ஓடோடி வந்து அவதூறுகளை அள்ளி வீசியுள்ளதாக கூறியுள்ள அமைச்சர் ரகுபதி, திமுகவும் இதர எதிர்க்கட்சிகளும் கொடுத்த அழுத்தத்தால் தான் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும், திமுக அரசு மக்களிடம் பெற்றிருக்கும் பேராதரவால் தன்னிலை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் மனம்போன போக்கில் எடப்பாடி பழனிசாமி உளறிக்கொட்டி கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.