கடந்த நான்காண்டு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சவக்குழியில் புதைந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். 24 மணி நேரத்தில் தஞ்சை, திருப்பத்தூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நடந்துள்ள கொலை சம்பவங்களை பட்டியலிட்டு, மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சராசரி ஒரு நாள் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி என்று குறிப்பிட்டுள்ளார். கொலைகளுக்கும், கலவரங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் இடையில் தான் நாம் வாழ்கிறோம் என்று தெரிவித்த அவர், "The Dictator" எனும் ஆங்கில படத்தின் ஹீரோவுக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று சாடியுள்ளார்.