திமுக ஆட்சியில் சாத்தான்குளம் காவல் நிலைய மரணம் போன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 28 பேர் காவல் நிலையங்களில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.