தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி சர்வே மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை, கர்நாடகத்தின் பட்டியலின சர்வேயிலிருந்து கற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு, தேசிய அளவில் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிப்பதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் எனக் கூறியுள்ள அவர், சமூகத்தில் எந்தெந்த சாதிகள் சமூகநிலை, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட கூறுகளில் மிகவும் பின் தங்கியுள்ளன என்பதை அறிய தெலங்கானா, பீகார், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டது போன்ற சாதிவாரி சர்வே கட்டாயம் என தெரிவித்துள்ளார்.