காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 3 முக்கியத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என, அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். பீகாரில் ராகுல் காந்தி பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பயனுள்ள மற்றும் வெளிப்படையான சாதி கணக்கெடுப்பு, தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு, எஸ்.சி மற்றும் எஸ்.டி துணைத் திட்டம் ஆகியவை கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என ராகுல்காந்தி கூறியதாக தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் நீதிக்காக இந்த மூன்று விஷயங்களையும் செய்வோம் என்று ராகுல்காந்தி பேசியதாக, செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.