மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது தங்களை அழைக்காததால் வருத்தப்பட்டதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக கூறினார். கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள 88 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு கூட்டணி பற்றி முடிவெடுக்க உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும், அதிமுகவில் தங்களை இணைக்கும் போதுதான் இபிஎஸ்ஸின் தலைமையை ஏற்பது குறித்து பதிலளிக்க முடியும் என்றும் ஓபிஎஸ் கூறினார்.3