ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொங்குப் பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொடூர சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், திமுக ஆட்சியில் எவருக்கும் பாதுகாப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை குற்றங்களால் பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்துவிடும் அபாயம் உள்ளதால், சம்மந்தப்பட்ட குற்றவாளியை கண்டறிந்து கைது செய்வதோடு, சட்ட ஒழுங்கை நெறிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.