ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் MRF தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து கூட்டம் நடத்த முற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மே தின தொழிலாளர்கள் வாழ்த்துகளைக் கூற வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் உட்பட அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும் இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு பயப்படுபவர்கள் அதிமுகவினர் அல்ல என்றும், எத்தனை அடக்குமுறைகளை ஏவி விட்டாலும் எதிர்கொள்ள கூடிய வல்லமை அதிமுகவினருக்கு உள்ளது எனவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.